நம் உலகத்தை ஒரு நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகக் கற்பனை செய்துகொள்வோம். ஓர் ஆணும் பெண்ணும் (குரங்கிலிருந்து உருவானவர்கள்) பாதையற்ற காடுகள் வழியாக நடந்தே செல்கிறார்கள். திடீரென்று பசிக்கிறது. அங்கே மாமரம் ஒன்றில் நிறைய மாங்கனிகள் தொங்குகின்றன. அதன் அருகே ஒரு வயல். அந்த வயலில் நிறைய கோதுமை விளைந்திருக்கிறது. இரண்டுமே உணவுப்பொருள்கள்தாம். ஆனால்இ இந்த இரண்டு இனியவர்களும் மாங்கனிகளைப் பிடுங்கி உண்ண ஆரம்பிக்கிறார்கள். கடித்தே சாப்பிடுகிறார்கள். அவர்களின் கைகள்இ உடல் எல்லாம் மாம்பழச்சாறு வடிகின்றது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து உண்கிறார்கள். ஒரு கட்டத்தில் பசி அடங்கிவிடுகிறது. 'இனி இந்த மரத்தை எப்போது பார்ப்போமோ?' என்று சொல்லித் தொடர்ந்து உண்கிறார்கள்.நிற்க.
எந்தக் கடைக்குப் போனாலும் நம் கண்கள் இனிப்பின் பக்கம் போகக் காரணம் என்ன?
மேற்காணும் நம் மூதாதையர்களிடமிருந்து நாம் பெற்றி இனிப்பு ஜீன்தான். அது என்ன இனிப்பு ஜீன்?
இன்று பப்பீஸ் பேக்கரி சென்று ஒரு கேக் வாங்கி அதை உண்ணத் தொடங்குகிறோம். நாம் முதலில் உண்பது கேக்கின் மேலிருக்கும் ஜஸிங்தான். ஏன்? அதுதான் மிகவும் இனிப்பான பகுதி. அதைக் கடிக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. அதை நக்கினாலே போதும். வாயில் கரைந்துவிடும். ஆனால்இ உடலுக்கு ஆபத்தான பகுதியும் அதுவே.
ஆக,
இனிப்பான ஒன்றும்,
செய்வதற்கு எளிதான ஒன்றும்,
பார்ப்பதற்கு அழகான ஒன்றும் உடனே நம்மைக் கவர்கிறது.
ஆனால்இ இந்த மூன்றையும் மட்டும் செய்பவர் உணர்வு முதிர்ச்சி பெறமாட்டார் என்று சொல்கிறார் டேனியல் கோல்மேன் என்கிற உளவியல் ஆராய்ச்சியாளர்.
எப்படி?
ஐந்து வயது நிரம்பிய ஐம்பது குழந்தைகளை வைத்து ஒரு பள்ளியில் ஆய்வு செய்யப்படுகிறது. அன்றைய நாளில் ஆசிரியை வகுப்பிற்குள் ஒரு வாளியோடு நுழைகிறார். வாளி முழுவதும் ஜிலேபி பாக்கெட்டுகள். மாணவர்கள் அனைவருக்கும் அதைக் கொடுக்கின்றார் ஆசிரியை. 'ஒரு நிமிடம்! நான் தலைமையாசிரியை அறைக்கு ஒரு வேலையாகச் செல்கிறேன். வர 10 நிமிடங்கள் ஆகும். நான் வரும்வரை நீங்கள் இதைச் சாப்பிடாமல் வைத்திருந்தால் இன்னும் உங்களுக்கு இரண்டு பாக்கெட் கொடுப்பேன். ஒருவேளை சாப்பிட்டுவிட்டால் ஒன்றும் கிடையாது' என்று சொல்லிவிட்டுச் செல்கின்றார். மாணவர்களின் செயல்பாடுகளை அங்கிருந்த கேமராக்கள் வழியாக ஆராய்ச்சியாளர்கள் பார்க்கிறார்கள். ஆசிரியை வெளியில் சென்ற அடுத்த நொடி சில குழந்தைகள் ஜிலேபியை சாப்பிட்டுவிட்டன. சில குழந்தைகள் அந்தச் சோதனையைத் தவிர்க்க தங்கள் பைகளுக்குள் வைத்துவிட்டனர். சில குழந்தைகள் கடிகாரத்தைப் பார்த்து பரபரப்பாக இருந்தனர். சில குழந்தைகள் பக்கத்துக் குழந்தைகளோடு பேரம் பேசின. சில குழந்தைகள் சாப்பிடாமல் வைத்திருந்தார்கள். இந்தக் குழந்தைகள் வளர்ந்தபின், 20 ஆண்டுகள் கழித்துஇ அவர்கள் படிக்கும் இடம்இ வேலை பார்க்கும் இடத்திற்கு அவர்களைத் தேடிச் செல்கின்றனர் ஆய்வாளர்கள். இப்போது அவர்களுக்குக் கொடுக்கப்படுவது உணர்வு முதிர்ச்சி பற்றிய வினாத்தாள். அவர்கள் தங்கள் வாழ்வில் வருகின்ற உணர்வுகளை - பசி, ஏமாற்றம், வருத்தம், கவலை, ஆசை, தேடல், சோர்வு, விரக்தி - எப்படி கையாளுகிறார்கள் என்பதை அறியும் வினாத்தாள். எந்தக் குழந்தை ஜிலேபியை உடனே சாப்பிட்டதோ அது உணர்வு முதிர்ச்சியில் குறைவான மதிப்பெண் பெற்றதையும், எந்தக் குழந்தை சாப்பிடாமல் வைத்திருந்ததோ அது உணர்வு முதிர்ச்சியில் (Emotional Maturity) அதிக மதிப்பெண் பெற்றதையும் கண்டறிகிறார்கள்.
இதிலிருந்து உருவானதுதான் 'நிவர்த்தி செய்வதைத் தள்ளிப்போடுவது.'
நான் ஓர் ஆசிரியர். நான் வகுப்பு எடுக்கிறேன். வகுப்பில் இரு மாணவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எனக்கு கோபம் வருகிறது. உடனே நான் அவர்களை அடித்து விடுகிறேன். என் கோபம் நிவர்த்தியாகிவிடுகின்றது. ஆனால், நான் உணர்வு முதிர்ச்சி இல்லாதவன் ஆகிறேன்.
நான் எந்த அளவுக்கு நிவர்த்தி செய்வதைத் தள்ளி வைக்கிறேனோ அந்த அளவிற்கு என்னுடைய முதிர்ச்சியின் அளவு இருக்கும்.
இது கற்றலில் இரண்டு நிலைகளில் பயன்தரும்:
ஒன்று, ஆசிரியர் மாணவர்கள்மேல் கொண்டிருக்கும் கோபம் போன்ற உணர்வுகளை உடனடியாக நிவர்த்தி செய்தலைத் தவிர்க்க வேண்டும்.
இரண்டு, ஜிலேபி போன்று இருப்பதை நான் தள்ளி வைத்துவிட்டு மற்றதில் ஈடுபாடு காட்ட வேண்டும். நாளை எனக்குத் தேர்வு. இன்று மாலை டிவியில் கிரிக்கெட் பார்ப்பது எனக்கு ஜிலேபி சாப்பிடுவது போல இருக்கும். ஆனால்இ அதை நான் தள்ளி வைத்தலில்தான் என் உணர்வு முதிர்ச்சி இருக்கிறது.