இன்றைய நாளில் கிறிஸ்தவர்கள் மறைவல்லுநரும், அருள்நெறியாளரும், புனிதருமான பதுவை நகர் அந்தோனியாரின் திருநாளைக் கொண்டாடுகிறது.இவருடைய மறையுரைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. மீன்களும் இவருடைய போதனையைக் கேட்டன. கழுதையும் இவர் நற்கருணையைத் தூக்கிச் சென்ற போது மண்டியிட்டு வணங்கியது.
இவரின் இந்தப் புலமைக்குக் காரணம் மூன்று:
ஒன்று, இவர் தன் கைகளில் ஏந்திய விவிலியம்.
இரண்டு, அந்த விவிலியத்தில் துள்ளி விளையாடும் குழந்தை இயேசு.
மூன்று, இன்னொரு கையில் திருச்சிலுவை.
வகுப்பறையில் பாடம் நடத்திய மறைவல்லநர் அல்லர் இவர். மாறாக, தன் நாவால் இறைவார்த்தையை நன்கு அறிவித்தவர். அந்த இறைவார்த்தையை அறிவித்ததால் அதற்கேற்ப தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்.
இன்றைய ஆசிரியர்கள் தாங்கள் எதில் வேரூன்றியிருக்கிறார்கள் என்பதை அறிதல் நலம்.